நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் கீழ் அணை-140, கடனாநதி அணை-5.
ராமநதி அணை-29, கருப்பாநதி அணை-21, குண்டாறு அணை-32, அடவிநயினார் அணை-15, வடக்குபச்சையாறு அணை-48.4, நம்பியாறு அணை-15, கொடுமுடியாறு அணை-50.
இதேபோல் நான்குனேரியில் 104 மி.மீ மழையும், ராதாபுரத்தில் 63 மி.மீ மழையும், ஆலங்குளத்தில் 94 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 55 மி.மீ மழையும்,
ஸ்ரீவைகுண்டத்தில் 65 மி.மீ மழையும், சேரன்மகாதேவியில் 57 மி.மீ மழையும், அம்பாசமுத்திரத்தில் 46.3 கன அடியும், மூலக்கரைப்பட்டியில் 33 மி.மீ மழையும், தென்காசியில் 42.2 மி.மீ மழையும், செங்கோட்டையில் 29 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அருவிகளில் வெள்ளம்: நீர்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் பாணதீர்த்த அருவியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பாணதீர்த்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை நீடிக்கிறது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் தடை விதிக்கப்பட்டு்ள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.