முகப்பு
தற்போதைய செய்திகள்

40 வயது கடந்த பெண்களுக்கு ஆண்டு தோறும் மார்பக பரிசோதனை அவசியம்

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் தங்கள் மார்பகங்களை பரிசோதை செய்து கொள்ள வேண்டும் என மகப்பேறு மருத்துவர் டாக்டர் சங்கீதா கூறினார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:05 AM
பகிர்:

நாற்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுதோறும் தங்கள் மார்பகங்களை பரிசோதை செய்து கொள்ள வேண்டும் என மகப்பேறு மருத்துவர் டாக்டர் சங்கீதா கூறினார்.

அப்பல்லோ செவிலியர் கல்லூரியின் சார்பில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் டாக்டர் சங்கீதா பேசியது:

Advertisement

இந்தியாவில் அதிகப்படியான பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். உடன் பருமன், வாழ்க்கை முறை மாற்றம், மரபணு போன்ற காரணங்களினால் பெண்கள் மார்பகப் புற்றுநோய் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் அதிகப்படியாக பாதிக்கப்படுவது மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆகும்.

இந்தியாவைப் பொருத்தவரை கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் பத்து பேருக்கும், நகரங்களில் வசிக்கும் ஒரு லட்சம் பெண்களில் 25 முதல் 30 பெண்களும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்ப நிலையிலேயே இந்த நோயைக் கண்டறிதால் எளிதில் குணப்படுத்திவிடலாம். 40 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். மூப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள், இளம்பெண்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் மார்பகங்களை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.

மார்பகப் புற்றுநோய் குறித்த அறிகுறி, கண்டறிதல், ஆரம்ப நிலையிலேயே அதனை நீக்குதல் ஆகியவை குறித்த விடியோக் காட்சிகளை அப்பல்லோ செவிலியர் கல்லூரி மாணவிகளால் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments