கிருஷ்ணகிரி அருகே மர்ம காரால் பரபரப்பு
கிருஷ்ணகிரி அருகே கடந்த இரண்டு நாள்களாக நின்று கொண்டிருந்த நம்பர் பிளேட் இல்லாத மர்ம காரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே கடந்த இரண்டு நாள்களாக நின்று கொண்டிருந்த நம்பர் பிளேட் இல்லாத மர்ம காரால் இன்று பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி அருகே உள்ள கொத்தப்பேட்டையில் உள்ள தனியார் மாம்பழ கூழ் ஏற்றுமதி நிறுவனம் அருகே கடந்த இரண்டு நாள்களாக நம்பர் பிளேட் இல்லாத நிலையில் மர்ம கார் நிர்ப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த மர்ம கார் கர்நாடக மாநிலத்தில் பதிவு செய்தது என்றும் காரை சுற்றிலும் மிளகாய் பொடி தூவியது தெரியவந்தது.
இதனால், ஏதாவது குற்றச் செயலில் ஈடுபட்ட நபர்கள் இந்தக் காரை கிருஷ்ணகிரி அருகே நிறுத்தி தப்பி இருக்கலாம் என்ற போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தாலுக்கா போலீஸார், அந்த காரை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து, தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.