108 ஆம்புலன்ஸ்: தீபாவளி நாளில் 22 ஆயிரம் அழைப்புகள்
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி மையத்துக்கு 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.
தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று 108 ஆம்புலன்ஸ் தொலைபேசி மையத்துக்கு 22 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளன.
கடந்த ஆண்டைக்காட்டிலும் சுமார் 6,600 அழைப்புகள் அதிகமாக வந்துள்ளன என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆண்டு முழுவதையும் ஒப்பிடும்போது, தீபாவளி சமயத்திலேயே ஆம்புலன்ஸ் சேவைக்கான அழைப்புகள் அதிகம் வரும். மேலும் தீபாவளி சமயத்தில் பட்டாசு, தீக்காய விபத்துகளுக்கான அழைப்புகளைக் காட்டிலும், சாலை விபத்துகள், காயங்கள் போன்றவற்றுக்கான அழைப்புகளே அதிகம் வரும். இதற்குக் காரணம் தீபாவளி சமயத்தில்தான் அதிக மக்கள் தங்கள் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்வார்கள். இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட அனைத்து சாலைகளில் போக்குவரத்து அதிகமாகக் காணப்படும். மேலும் அதிக வேகமும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
Advertisement