நாகையில் சுப்பிரமணியன்சுவாமியின் உருவ பொம்மையை எரித்து மீனவர்கள் போராட்டம்
பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி, எல்லைத் தாண்டும் தமிழக மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டாம் என இலங்கை அரசுக்கு ஆலோசனை தெரிவித்ததைக்
பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமி, எல்லைத் தாண்டும் தமிழக மீன்பிடி படகுகளை விடுவிக்க வேண்டாம் என இலங்கை அரசுக்கு ஆலோசனை தெரிவித்ததைக் கண்டித்து, நாகை மீனவர்கள் சுப்பிரமணியன்சுவாமியின் உருவ பொம்மையை எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை தாலூகா மீனவர்கள் சுப்பிரமணியன்சுவாமியின் உருவப் படம் மற்றும் உருவ பொம்மையைத் தீயிட்டு எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகை தோணித்துறை ரயில்வே கேட் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த மீனவக் கிராமங்களின் பஞ்சாயத்தார்கள் பங்கேற்று சுப்பிரமணியன்சுவாமியைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.