முகப்பு
தற்போதைய செய்திகள்

பர்கூர் அருகே மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல், ஓட்டுநர் கைது

பர்கூர் அருகே உள்ள ஒதிகுப்பம் ஏரிக்கரை பகுதியில் கந்திக்குப்பம் போலீஸார் கண்காணிப்பு பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:43 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.

பர்கூர் அருகே உள்ள ஒதிகுப்பம் ஏரிக்கரை பகுதியில் கந்திக்குப்பம் போலீஸார் கண்காணிப்பு பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி ஆவணங்களை ஆய்வு செய்ததில் அரசின் அனுமதியின்றி மணல் கடத்துவது தெரியவந்தது.இதைத் தொடர்ந்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார், அதன் ஓட்டுநர் செம்பிநாயனப்பள்ளியைச் சேர்ந்த செல்வராஜ்(24) என்பவரை கைது செய்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →