பாசனத்திற்கு நீர் திறக்க வலியுறுத்தி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தை பூட்டி விவசாயிகள் முற்றுகை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில்
பாசனத்திற்கு நீர் திறந்து விடக்கோரி சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலக வளாக கதவை பூட்டி விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு தமிழக உழவர் முன்னணி மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் சுமார் 25-க்கும் மேற்பட்டோர், வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும், வடக்குராஜன் வாய்க்காலிருந்து பாசனத்திற்கு நீர் திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளிக்க புதன்கிழமை காலை சென்றனர்.
ஆனால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராமமூர்த்தி அலுவலக நிமித்தமாக சென்னை சென்றிருந்ததால், மனுவை பெற்றுக் கொள்ள யாரும் இல்லாததால், ஆத்திரமடைந்த விவசாயிகள் அலுவலக வளாக கதவை பூட்டி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் முத்துக்குமரன் ஆகியோர் சென்று பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அறிவித்ததை அடுத்து போராட்டத்தை வாபஸ் பெற்று அனைவரும் கலைந்து சென்றனர். வீராணம்ஏரியிலிருந்து வருகிற செப்.14-ம் தேதி பாசனத்திற்கு நீர் திறந்து விடப்படும் என பொதுப்பணித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.