முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மீது வழக்கு

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் இவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

தற்போதைய செய்திகள்

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மீது வழக்கு

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் இவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:44 AM
பகிர்:

மனைவியை துன்புறுத்தியதாக ஆயுதப்படை முதுநிலை காவலர் மற்றும் அவரது தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் இவரது மனைவி மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, கரிவலம்வந்தநல்லூர், விசாலாட்சியம்மன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் கலைசந்தனமாரி. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மொட்டமலையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 11-வது அணியில் காவலராக வேலை செய்து வந்தார்.கிருஷ்ணன்கோவில், தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமையா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு காவல் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் சந்திரசேகர் (27) என்பவர் கலைசந்தனமாரி வேலை செய்த இடத்தில் நாயக் (முதுநிலை காவலர்) ஆக வேலை செய்து வந்துள்ளார்.இருவரும் திருமணம் செய்து கொள்ளும் எண்ணத்துடன் காதலித்து, திண்டுக்கல் மாவட்டம், நாகல்நாயக்கன்பட்டி துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 11.3.13-ல் பதிவு திருமணம் செய்துள்ளார்கள். பின்னர் மொட்டமலை புதிய காவலர் குடியிருப்பில் குடியிருந்து வந்துள்ளார்கள்.

இந்நிலையில் சந்திரசேகர் தனது மனைவியை காவலர் வேலையை ராஜூனாமா செய்யக் கூறியுள்ளார். கணவரின் பேச்சை நம்பி, கலைசந்தனமாரி வேலை ராஜூனாமா செய்துள்ளார்.சந்திரசேகரின் தந்தையான ஓய்வு பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமையா (62) அவரது மனைவி முருகேஸ்வரி (52) ஆகியோரின் தூண்டுதலின் பேரில், சந்திரசேகர் தனது மனைவியிடம் 50 பவுன் நகை வரதட்சிணையாக வாங்கி வந்தால்தான் சேர்ந்து வாழ முடியும் என்று கூறி, தனியே விட்டுச் சென்றுவிட்டாராம்.

சந்திரசேகர் விடுப்பில் வந்திருப்பதை அறிந்து 29.4.14-ம் தேதி கிருஷ்ணன்கோவிலில் உள்ள மாமனார் ராமையா வீட்டிற்கு கலைசந்தனமாரி சென்றுள்ளார். அங்கிருந்த கணவரும், மாமியாரும் சேர்ந்து கலைசந்தனமாரியை அடித்து கீழே தள்ளி, ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். இதில் தலையில் கலைசந்தனமாரிக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் கலைசந்தனமாரி புகார் செய்தார். நீதிமன்றம் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. இதன் பேரில் போலீஸார் சந்திரேசகர், முருகேஸ்வரி, ராமையா ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →