ஷார்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் கோவையில் பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்தவரிடம் இருந்து தங்கத்தைப் பறிமுதல் செய்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடைச் சேர்ந்தவர் தாசாத் (30). இவர், இன்று அதிகாலை 4 மணி அளவில் ஷார்ஜாவில் இருந்து வந்த விமானத்தில் கோவை விமான நிலையம் வந்திறங்கினார். அவர் வைத்திருந்த சூட்கேஸைச் சுற்றி, தகரம் போல் தங்கத்தை மறைத்து வைத்து வந்ததை சுங்கத் துறையினர் கண்டறிந்தனர். பின்னர் அவரிடம் தங்கத்தைப் பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.