கோவையில் சீல் வைக்காத இயந்திரங்கள்: வாக்கு எண்ணிக்கையை புறக்கணித்து பாஜக வெளிநடப்பு
கோவையில் சீல் இல்லாமல் வாக்கு இயந்திரத்தை வைத்து எண்ண முயன்றதைக் கண்டித்து பாஜக.வினர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர்.
கோவையில் சீல் இல்லாமல் வாக்கு இயந்திரத்தை வைத்து எண்ண முயன்றதைக் கண்டித்து பாஜக.வினர் வாக்கு எண்ணும் மையத்தை விட்டு வெளியேறினர்.
கோவை தெற்கு மண்டலத்தில் 3 இயந்திரங்களில் சீல் இல்லாமல் வாக்குப் பெட்டிகள் எண்ணிக்கைக்கு எடுத்து வரப்பட்டன. இதனை பாஜக முகவர்கள் எதிர்த்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பத்தால் 15 நிமிடங்கள் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது.
அப்போது, தேர்தல் அலுவலர் வரவேண்டும் என்று பாஜகவினர் கூறினர்
அவர் இல்லாமல், அந்த வாக்கு பதிவு இயந்திரங்களின் வாக்குகளை எண்ண முயன்றதால்., தெற்கு மண்டல பாஜகவினர் வாக்கு எண்ணிக்கையைப் புறக்கணித்து வெளியேறினர்.