முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவடபத்ரசாயி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் கோவிலின் புரட்டாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.பதியான பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் தலையாயது ஸ்ரீவில்லிபுத்தூர்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவடபத்ரசாயி கோவிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் கோவிலின் புரட்டாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.பதியான பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் தலையாயது ஸ்ரீவில்லிபுத்தூர்

Updated On : 5 ஜனவரி, 2024 at 6:52 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு ஸ்ரீவடபெருங்கோவிலுடையான் கோவிலின் புரட்டாசி பிரமோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பதியான பகவான் உகந்து எழுந்தருளியுள்ள திருத்தலங்களுள் தலையாயது ஸ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம். இங்கு எம்பெருமான் வடபத்ரசாயி, வடமஹாதாமன், வடபெருங்கோவிலுடையான், பள்ளிகொண்ட பரமஸ்வாமி எனப் பல திருநாமங்களடுன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் செய்கிறார்.

ஆழ்வார்களுள் பொங்கும் பரிவாலே பகவானிடம் ஈடுபட்ட பெரியாழ்வார், அழகிய நந்தவனம் அமைத்து இவ்வெம்பெரும்மானுக்கே மாலை கைங்கர்யம் செய்து வந்தார். அவர் தம் திருமகளாய் ஆண்டாள் இத்தலத்தில் அவதரித்து வடபெருங்கோவிலுடையானுக்கு திருப்பாவை என்னும் பாமாலையும் பாடி, பூமாலையும் சூடிக்கொடுத்தாள். எனவேதான் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த நாச்சியார் என்னும் திருப்பெயர் ஏற்பட்டது.

ஸ்ரீபெரியாழ்வாரும், ஸ்ரீஆண்டாளும் மங்களாசாசனம் செய்து ஈடுபட்ட வடபெருங்கோவிலுடையானின் புரட்டாசி திருவோண பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

12 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் கே.ரவிச்சந்திரன் செய்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →