ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தை கொலை: மகன் தலைமறைவு
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தை கொலை: மகன் தலைமறைவு
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தந்தையை கொலை செய்த மகனை போலீஸார் தேடி வருகிறார்கள்.ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மல்லி-ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நீ.சுப்பையாத்தேவர் (70). இவர் சித்தாள் வேலை செய்து வந்தார்.
இவரது மகன் பாண்டி (35) கொத்தனார் வேலை செய்து வருகிறார். ஒரே வீட்டில் குடியிருந்து வந்துள்ளார்கள்.இந்நிலையில் வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வந்த சுப்பையாத்தேவர் வீட்டில் குளித்துள்ளார். வீட்டினுள் பாண்டியின் மனைவி தரையில் படுத்திருந்துள்ளார். அவரது தலையின் அருகே நின்று, நின்று சுப்பையாத்தேவர் காலுக்கு எண்ணெய் தேய்த்து கொண்டிருந்துள்ளார்.
இதனைப் பார்த்து ஆத்திரமுற்ற மகன் பாண்டி, என் மனைவியை ஏன் தவறாக பார்க்கிறீர்கள் என்று கூறி தந்தையிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து இவர் தனது துணிகளை எடுத்துக் கொண்டு வீட்டின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மகள் காளீஸ்வரி வீட்டிற்கு சென்றுவிட்டாராம். அங்கு நடந்த சம்பவத்தை சுப்பையாத்தேவர் மகளிடம் கூறியுள்ளார்.
சற்று நேரத்தில் அரிவாளுடன் காளீஸ்வரி வீட்டிற்கு வந்த பாண்டி, தந்தை சுப்பையாத்தேவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.இது குறித்து காளீஸ்வரி, மல்லி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாண்டியைத் தேடி வருகிறார்கள்.