கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டு முன் குவிந்த அதிமுகவினர்: திமுகவினருடன் கைகலப்பு
சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டின் முன் திடீரென அதிமுகவினர் ஒரு குழுவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அங்கே குவிந்திருந்த திமுகவினர்
சென்னை கோபாலபுரத்தில் கருணாநிதி வீட்டின் முன் திடீரென அதிமுகவினர் ஒரு குழுவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஏற்கெனவே அங்கே குவிந்திருந்த திமுகவினர் அவர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கே கைகலப்பு எழுந்தது. தொண்டர்கள் சிலர் கைகளில் தடிகளுடன் சென்றதால் பிரச்னை எழுந்தது. இதனிடையே இரு தரப்பும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சிலருக்கு மண்டை உடைந்தது. இதனால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.