விவசாயி வீட்டில் நகை பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அருகே உள்ள வடக்கு நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை
தற்போதைய செய்திகள்விவசாயி வீட்டில் நகை பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அருகே உள்ள வடக்கு நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அருகே உள்ள வடக்கு நல்லூர் பகுதியை சேர்ந்த விவசாயி தங்கவேல் என்பவரின் வீட்டில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு புகுந்த மர்ம நபர்கள் நகை மற்றும் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றனர்.
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரணி அருகே உள்ள வடக்குநல்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயியான இவர் குடும்பத்துடன் சென்னைக்கு அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் தங்கவேலின் வீட்டிற்குள் புகுந்து வீட்டின் கதவில் இருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்று வீட்டின் பீரோவில் இருந்த 4 சவரன் தங்க நகை, ரூபாய் 15 ஆயிரம் பணம், மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.
இந்நிலையில் ஊருக்கு சென்று சனிக்கிழமை காலை வீட்டிற்கு வந்த தங்கவேல் வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்றதை அறிந்து இது குறித்து ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆரணியை அடுத்த வடக்கு நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. கடந்த வாரம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.
இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது கதவு பூட்டு உடைந்து கிடந்தது. உடனே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 4 பவுன் நகை, கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 15 ஆயிரம் ரொக்கத்தை காணவில்லை.