தற்போதைய செய்திகள்

ராஜபாளையம் அருகே தேர்வு எழுதச் சென்ற மாணவி மாயம்

விருதுநகர் அருகே தேர்வு எழுதச் சென்ற பிளஸ்2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக தந்தையார் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகார் செய்தார்.

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தேர்வு எழுதச் சென்ற பிளஸ்2 மாணவி மாயமான சம்பவம் தொடர்பாக தந்தையார் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவு புகார் செய்தார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சுந்தராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த லோகிதாசன் மகள் சினேகா(17). இவர் தளவாய்புரம் பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 31-ம் தேதி பிளஸ்2 கடைசித் தேர்வு எழுதுவதற்காக சென்றாராம். அதையடுத்து நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத காரணத்தால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உற்றார், உறவினர் வீடுகளில் விசாரித்துள்ளனர். அதில், சினேகா எங்கிருக்கிறார் என்கிற தகவல் கிடைக்கவில்லையாம்.

இது தொடர்பாக லோகிதாசன் சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில், இதே ஊரைச் சேர்ந்த போல்ராஜ் என்பவரின் மகன் முனீஸ்வரன்(17) என்பவர் தான் கடத்திச் சென்றிருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.590 கோடி முறைகேடு: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் பங்குகள் 20% சரிவு!

வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல் | செய்திகள்: சில வரிகளில் | 23.02.26

இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? மீண்டும் விண்ணப்பிக்கலாம்!

ஹெட்மேயர், ரோவ்மன் பௌவல் அதிரடி: ஜிம்பாப்வேவுக்கு 255 ரன்கள் இலக்கு!

நாளை நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலா

SCROLL FOR NEXT