ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மகளுடன் காணவில்லை என புகார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் மகளுடன் காணவில்லை என புகார்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இளம் பெண் தனது 4 வயது மகனுடன் காணாமல் போய்விட்டதாய் போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ந.காஜாமுகைதீன் (50). இவரது மகள் முர்ஷிதா பேகம் (25) என்பவரை சென்னையைச் சேர்ந்த சுக்கூர் என்பவருக்கு 2010-க்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இதனால் இவர்களுக்கு சுனவில் (4) என்ற மகன் உண்டு. மகள் நடவடிக்கை சரியில்லை என்று கேள்விப்பட்ட காஜாமுகைதீன் 20.3.15-ம் தேதி சென்னை சென்று, மகளையும் மருமகளையும் சமாதானம் செய்து வைத்துள்ளார். மேலும் மகளையும், பேரனையும் தன்னுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையை வீட்டில் இருந்த முர்ஷிதா பேகம் மற்றும் சுனவில் ஆகியோரை 23.3.15-ம் தேதி முதல் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் காஜாமுகைதீன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து தாய் மற்றும் மகனை தேடி வருகிறார்கள்.