வழக்குரைஞர்கள் நீதிமன்றம் புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டு கொன்ற ஆந்திர அரசை கண்டித்து பண்ருட்டி வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதி மன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழக தொழிலாளர்கள் 20 பேரை சுட்டு கொன்ற ஆந்திர அரசை கண்டித்து பண்ருட்டி வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை நீதி மன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாக வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வழக்குரைஞர் சீனுஜெயராமன் தலைமை வகித்தார். இதில் 20 பேரை சுட்டுக் கொன்ற ஆந்திர மாநில அரசு மத்திய அரசு கலைக்க உத்தரவிட வேண்டும். நீதி விசாரணை நடத்த வேண்டும் என கோஷமிட்டனர். வழக்குரைஞர்கள் வடிவேலன், செல்வராஜ், பக்கிரி உள்ளிட்ட மூன்று வழக்குரைஞர்கள் சங்கங்களை சேர்ந்த பொருப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.