சிங்கப்பூரிலிருந்து கடத்திவரப்பட்ட 7 கிலோ தங்கம் திருச்சியில் பறிமுதல்
சிங்கப்பூரிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 7 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை
சிங்கப்பூரிலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட 7 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூரிலிருந்து வெள்ளிக்கிழமை இரவு 10.50-க்கு வந்த டைகர் ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறையினர் பரிசோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் தொண்டியைச் சேர்ந்த மு. நிவாஸ்கான், 7 கிலோ தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவரிடம் 7 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர். இவருக்கு உதவியதாக விமான நிலைய மருத்துவ அதிகாரி இசக்கி, ஊழியர் நடராஜன் ஆகியோர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் சுங்கத்துறை அதிகாரிகள்.