முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் 600 மரக்கன்று நடும் திட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், நாடார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், நகரில் 600 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் தொடக்க விழா, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வியாபாரிகள் சங்கம் சார்பில் 600 மரக்கன்று நடும் திட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர், நாடார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், நகரில் 600 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் தொடக்க விழா, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:14 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர், நாடார் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், நகரில் 600 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் திட்டம் தொடக்க விழா, இங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பெருமாள்பட்டி நாடார் உறவின்முறைத் தலைவர் மாயாண்டி தலைமை தாங்கினார். செயலாளர் ஏ.கலையரசன் முன்னிலை வகித்தார்.

சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஆர்.லெனின் செல்வராஜ், 600 மரக்கன்றுகள் நடும் திட்டத்தைத் தொடங்கி வைத்து வியாபாரிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிப் பேசுகையில் கூறியதாவது: சங்கம் சார்பில் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்குச் சொந்தமான திருமுக்குளம் தற்போது பராமரிக்கப்பட்டு, பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் நீராட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது நகரில் மரக்கன்றுகள் நட்டு பராமரித்து, நம்மால் முடிந்த அளவு புவி வெப்பமயமாதலை தடுத்து நாட்டிற்கு உதவ வேண்டும். நமது சுற்றுச்சூழலை பாதுகாக்க வியாபாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர். நிகழ்ச்சியில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர். பொருளாளர் கே.சி.பி.சி.முத்துராஜன் நன்றி கூறினார்

முழு கட்டுரையைப் படிக்க →