முகப்பு
தற்போதைய செய்திகள்

பேரவைக் கூட்டத்தில் மதுவிலக்கு குறித்து அறிவிக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:28 AM
பகிர்:

மதுவிலக்கை அமல்படுத்தும் அறிவிப்பை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்க வேண்டும் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  கொளத்தூரில் பேசலாம் வாங்க நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் அளித்த பேட்டி:

கேள்வி: பேரவையில் தொகுதி பிரச்னைகள் பற்றி பேசுவீர்களா

பதில்: பேரவையில் தமிழகப் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. அத்தி பூத்தாற்போல் சட்டப்பேரவையைக் கூட்டியுள்ளனர். இந்தக் கூட்டம் எவ்வளவு நாள்கள் நடக்கிறது என்று தெரியவில்லை. ஜனநாயக முறைப்படி பேச அனுமதித்தால், மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவோம்.

கே: தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் பங்கேற்க குரல் கொடுப்பீர்களா

 ப: ஏற்கெனவே குரல் கொடுத்துவிட்டோம். அது நீதிமன்றம் வரை போயிருக்கிறது. தொடர்ந்து குரல் கொடுப்போம்.

கே: மதுவிலக்கு தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவிக்க வாய்ப்பு உண்டா

 ப: மதுவிலக்கை சுதந்திர தினத்தில் அறிவித்தால் சட்டப்பேரவை கூடும் நேரத்தில் அறிவித்துவிட்டார்களே என்று பிரச்னை எழலாம் என முதல்வர் ஜெயலலிதா நினைத்திருக்கலாம். அதன் காரணமாக அறிவிக்காமல் விட்டிருக்கலாம். சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவிக்கக் கூடும். அப்படி அறிவித்தால் வரவேற்கத் தயார் என்று அவர் கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →