ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண் காவலரைத் தாக்கிய இருவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகாசி தனி ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வருபவர் முத்து முனீஸ்வரி (27). இன்று இவர் ஸ்ரீவில்லிபுத்தூர், ஆண்டாள் கோவிலில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவில் பணியில் இருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் மது போதையில் வந்த இருவர், வாகனத்தை போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தியுள்ளார்கள். அப்போது அங்கிருந்த காவலர் முத்து முனீஸ்வரி, அவர்களிடம் வாகனத்தை ஓரமாக வேறு இடத்தில் நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரமுற்ற இவர்கள் முத்து முனீஸ்வரியைத் தாக்கியுள்ளார்கள்.
இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் முத்து முனீஸ்வரி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து காவலரைத் தாக்கிய சித்தாலம்புத்தூரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ராதாகிருஷ்ணன் (35) மற்றும் மாரியப்பன் மகன் வீரபெருமாள் (35) ஆகிய இருவரைக் கைது செய்தனர்.