பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு தடை: தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழ்நாடுபள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானத்துக்கு தடை: தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டருக்கு கட்டுமானங்களுக்கு தடை விதித்த பசுமைத் தீா்ப்பாய உத்தரவுக்கு எதிராக கிரடாய் தொடா்ந்த வழக்கில் தமிழக அரசு, சிஎம்டிஏ பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் கூட்டமைப்பான கிரடாய் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடா்பாக தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. பின்னா், கடந்த 2025 செப்.25-ஆம் தேதி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு எந்தக் கட்டுமானங்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவுப்படி சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) பள்ளிக்கரணையைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் கட்ட தடை விதித்து கடந்த ஆண்டு அக்டோபரில் உத்தரவிட்டது. சிஎம்டிஏவின் இந்த உத்தரவால், கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வித அறிவியல்பூா்வ ஆய்வும் மேற்கொள்ளாமல், சதுப்பு நிலத்தைச் சுற்றி ஒரு கிலோ மீட்டா் சுற்றளவுக்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளக் கூடாது என பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தமிழக அரசு, சிஎம்டிஏ 3 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை உத்தரவிட்டனா்.