முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒட்டப்பிடாரத்தில் கட்டடத் தொழிலாளி கொலை

ஒட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை இரவு கட்டடத் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செயயப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீஸார்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:39 AM
பகிர்:

ஒட்டப்பிடாரம் அருகே வியாழக்கிழமை இரவு கட்டடத் தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செயயப்பட்டார். இதுதொடர்பாக அவரது நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

 தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் பகுதியைச் சேர்ந்தவர் சேதுராமன் (43). கட்டடத் தொழிலாளி.  இவர், வியாழக்கிழமை இரவு அங்குள்ள காட்டுப் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தார்.

 சம்பவ இடத்துக்குச் சென்ற ஒட்டப்பிடாரம் போலீஸôர் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில்,  சேதுராமனை கொலை செய்ததாக வெள்ளாரம் தெற்குதெருவைச் சேர்ந்த முருகனை (46) போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

 கொலையுண்ட சேதுராமனின் உறவுப் பெண் மாரியம்மாள் குறித்து முருகன் தகாதா வார்த்தைகளால் பேசியதாகவும் இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.