கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரி நிரம்பியது
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நீர்மட்டம் முழுக்கொள்ளவை தொட்டு நிரம்பி காட்சியளிக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீராணம்ஏரி முழுக்கொள்ளவை
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி நீர்மட்டம் முழுக்கொள்ளவை தொட்டு நிரம்பி காட்சியளிக்கிறது. கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீராணம்ஏரி முழுக்கொள்ளவை எட்டியது. தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு வீராணம்ஏரி முழுக்கொள்ளளவு நிரம்பி காட்சியளிக்கிறது.
கடந்த 2014ம் ஆண்டு ஆக.10-ம் தேதி மேட்டூரிலிருந்து கல்லணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து கடந்த ஆக.14-ம் தேதி நீர் திறந்துவிடப்பட்டது. கல்லணையிலிருந்து திறந்துவிடப்பட்ட நீர் கீழணைக்கு ஆக.21-ம் தேதி வந்து சேர்ந்தது. அதன் பின்னர் கீழணையிலிருந்து ஆக.22-ம் தேதி முதல் படிப்படியாக வீராணம்ஏரிக்கு வடவாறு வழியாக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம்ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்திற்கு நீர் அனுப்பப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீர் ஆதாரமாக ஏரியாக வீராணம்ஏரி திகழ்கிறது. இந்நிலையில் தற்போது வீராணம்ஏரிக்கு விநாடிக்கு 780 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை வீராணம்ஏரியின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 47.50 அடியை தொட்டு நிரம்பியது. ஏரியிலிருந்து சென்னை குடிநீருக்காக விநாடிக்கு 74 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.