சுமை தூக்கும் தொழிலாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
தமிழ்நாடு நுகர்வோர் வணிபக் கழகத்தின் கிடங்கு நிறுவனங்களில், ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்நாடு நுகர்வோர் வணிபக் கழகத்தின் கிடங்கு நிறுவனங்களில், ஏராளமான சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பணிநிரந்தரம், அடிப்படை சம்பளம், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தழிழ்நாடு பன்ருட்டி சேமிப்பு கிடங்கில் சுமார் 31 சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதால் வெளியூரில் இருந்த லாரிகளில் வந்த அரிசி உள்ளிட்ட பொருட்களை இறக்காமல் நிறுத்தப்பட்டுள்ளது.
அதே போன்று ரேஷன் கடைகள், பள்ளிகள், விடுதிகள், தொழிற்சாலை, மருத்துவமனைகள் இவற்றிற்கு அனுப்ப வேண்டிய அரிசி பருப்புகள் தடைப்பட்டுள்ளது. இதனால் லோடு ஏற்ற வந்த லாரியும், இறக்க வந்த லாரியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் சுமைதூக்கு தொழிலாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement