முகப்பு
தற்போதைய செய்திகள்

மனைவி கொலை: கணவன் உள்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கிருஷ்ணகிரி மாவட்டம் தலவாய்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ்(32). இவரது மனைவி கிரிஜா(26). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் தலவாய்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ்(32). இவரது மனைவி கிரிஜா(26). இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் இவர்களுக்குள் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. அப்போது பால்ராஜ் மனைவியை தாக்கியுள்ளார். அதில்  கிரிஜா உயிரிழந்தார். கொலையை மறைக்க கிரிஜா தூக்கிட்டு தற்கொலை செய்ததுபோல் நம்பவைக்க முயற்சித்தனர். இந்த வழக்கில் பால்ராஜ் அவரது அம்மா ராஜீ மற்றும் அவரது தந்தை பாலப்பன்  ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் இன்று நீதிபதி தீர்ப்பள்ளித்தார். அதன்படி 3 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5 ஆயிரம் அபராதமும், தடையத்தை மறைக்க முயன்றதாக தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →