ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க வேண்டி ஆண்டாள் கோவில் தங்கத் தேர் இழுத்த அமைச்சர்
தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.
தற்போதைய செய்திகள்ஜெயலலிதா முதல்வராக பதவியேற்க வேண்டி ஆண்டாள் கோவில் தங்கத் தேர் இழுத்த அமைச்சர்
தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.
தமிழக முதல்வராக அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க வேண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கத் தேர் இழுத்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலிதாவின் பிறந்தநாள் 24-ம் தேதி (செவ்வாய்கிழமை) கொண்டாடப்படுவதை முன்னிட்டும், அவர் மீண்டும் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டியும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கட்சியின் மாவட்ட ஜெயலலிதா பேரவை அவைத் தலைவர் மல்லி எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
பின்னர் தங்கத் தேரை சன்னதியைச் சுற்றிலும் இழுத்தனர். சிறப்பு பூஜைகளை முத்துபட்டர், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் செய்தனர். நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் குழுத் தலைவர் கே.காளிமுத்து, கட்சியின் மகளிரணி இணைச் செயலாளர் சக்திகோதண்டம், தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் எஸ்.சுப்புராஜ், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி, அத்திகுளம் வங்கியின் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்சியை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்.இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட அதிமுக செய்திருந்தது.