வாய்ப்பேச இயலாத பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 9 ஆண்டு சிறை
திருவாரூர் அருகே வாய்ப்பேச இயலாத இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு திருவாரூர் நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது
திருவாரூர் அருகே வாய்ப்பேச இயலாத இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கு திருவாரூர் நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் வீரையன் மகன் ஓட்டுநர் வினோத் (25). இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் காந்தி என்ப வரின் மகள் மனோகரி (23). வாய்ப்பேச இயலாத இவர் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2010 ம் ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த மனோகரியை வினோத் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் நன்னிலம் போலீஸார் வழக்குப் பதிந்து வினோத்தை கைது செய்து திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி அன்புராஜ் குற்றஞ்சாட்டப்பட்ட வினோத்துக்கு 9 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 11,000 அபராதம் விதித்து தீர்ப் பளித்தார். இதையடுத்து வினோத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Advertisement