சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொலைபேசி ஊழியர் மரணம்
சிதம்பரம் அருகே வல்லம்படுகையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றும் இவர் வியாழக்கிழமை சிதம்பரம் அருகே
சிதம்பரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொலைபேசி ஊழியர் ஒருவர் வியாழக்கிழமை மரணமடைந்தார்.
சிதம்பரம் அருகே வல்லம்படுகையைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40). பிஎஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தில் ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றும் இவர் வியாழக்கிழமை சிதம்பரம் அருகே விபீஷணபுரத்தில் பாண்டியன் என்பவரது வீட்டு இணைப்பு தொலைபேசி கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகேயிருந்து மின்கம்பியில் கைபட்டு மின்சாரம் பாய்ந்து இறந்தார்.
இதுகுறித்து அண்ணாமலைநகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.