விருதுநகரில் சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பெண் சாவு
விருதுநகர் சீத்தாக்காளி கோயில் தெருவைச் சேர்ந்த செல்வரத்தினத்தின் மனைவி மகேஸ்வரி(52). இவர் வெள்ளிக்கிழமை காலையில் சிவன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக
விருதுநகர் சிவன் கோயில் தெப்பக்குளத்தில் தவறி விழுந்த பெண் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.
விருதுநகர் சீத்தாக்காளி கோயில் தெருவைச் சேர்ந்த செல்வரத்தினத்தின் மனைவி மகேஸ்வரி(52). இவர் வெள்ளிக்கிழமை காலையில் சிவன் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றாராம். அப்போது, வழிபாடு செய்வதற்கு முன் தெப்பக்குளத்திற்கு சென்ற போது திடீரென கால் வழுக்கி தவறி குளத்திற்குள் மூழ்கினராம். இதை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து விரைந்து வந்து மீட்டு பார்த்ததில் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக திருக்கோயில் அலுவலர் ராஜேந்திரன் விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீஸார் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Advertisement
மேலும், இது குறித்து போலீஸாரும் வழக்கு பதிவு செய்து சாவு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.