முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு குறித்து இயக்குநர் ஆய்வு

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னு நேரில் பார்வையிட்டு

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு குறித்து இயக்குநர் ஆய்வு

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னு நேரில் பார்வையிட்டு

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:08 AM
பகிர்:

ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பேரூராட்சிகளின் இயக்குநர் ராஜேந்திர ரத்னு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மம்சாபுரத்தின் அனைத்து வார்டுகளுக்கும் சென்ற இயக்குநர், கழிவு நீர் பாதைகள், குப்பைகள் தேங்கியிருந்த இடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார். முறையாக அனைத்து வார்டுகளிலும் துப்புரவுப் பணிகளை மேற்கொள்ளவும், கொசு மருந்துகளை முறையாக அடிக்கவும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் குடிநீர் குழாய்களின் அருகே தேங்கும் நீரை உடனே அப்புறப்படுத்தவும், குடிநீரில் முறையான அளவு குளோரின் மருந்து கலந்து விநியோகிக்கவும் அலுவலர்களை கேட்டுக் கொண்டார். பின்னர் உரக்கிடங்கைப் பார்வையிட்ட அவர், அது முறையாக பேணப்படுவதாகக் கூறினார். அங்கு அவர் மரக்கன்றும் நட்டார்.

செய்தியாளர்களிடம் இயக்குநர் ராஜேந்திர ரத்னு கூறுகையில்: டெங்கு கொசு பாதிப்பு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். காய்ச்சல் கண்டால், அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடனே சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

ஆய்வின் போது மதுரை மண்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் எம்.குணசேகரன், தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஆ.காமராஜ்,  உதவி செயற் பொறியாளர் சம்பத்குமார், செயல் அலுவலர்கள் சித்திரைக்கனி, பூங்கொடி முருகு, ஞானசேகரன், பணி ஆய்வாளர்கள் கருப்பையா, கலைஞானம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

முன்னதாக பேரூராட்சிகளின் இயக்குநர் சேத்தூர், செட்டியார்பட்டி பேரூராட்சி பகுதிகளில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாக இயக்குநர் பணீந்தர்ரெட்டி ஆகியோருடன் சென்று நேரடியாக டெங்கு பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →