முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி கடத்தல்: கணவர் போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லூர்துசாமி மகன் பிரான்சிஸ் சத்தியசீலன் (24).இவர் விருதுநகர், கத்தாளம்பட்டி, கோபால் என்பவரின் மகள் பிரியா (24) என்பவரைக் காதலித்து

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மனைவி கடத்தல்: கணவர் போலீஸில் புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லூர்துசாமி மகன் பிரான்சிஸ் சத்தியசீலன் (24).இவர் விருதுநகர், கத்தாளம்பட்டி, கோபால் என்பவரின் மகள் பிரியா (24) என்பவரைக் காதலித்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூரில் காதல் திருமணம் செய்து கொண்ட தனது மனைவியை அவரது தம்பி கடத்திச் சென்று விட்டதாக கணவர் போலீஸில் புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர், ரைட்டன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லூர்துசாமி மகன் பிரான்சிஸ் சத்தியசீலன் (24).இவர் விருதுநகர், கத்தாளம்பட்டி, கோபால் என்பவரின் மகள் பிரியா (24) என்பவரைக் காதலித்து 26.11.14-ம் தேதி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் தனிப்பயிற்சி மையத்தில் பிரியா, வங்கிப் பணியாளர் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி பெற்று வந்துள்ளார். அப்போது அடிக்கடி தம்பி, தங்கை மற்றும் அம்மா ஆகியோர் தங்கள் வீட்டிற்கு வரும்படி பிரியாவை வற்புறுத்தி வந்ததாக, பிரான்சிஸ் சத்தியசீலனிடம் பிரியா கூறியுள்ளார். அதற்கு பிரான்சிஸ், சிறிது காலம் கழித்துச் செல்லலாம் என்று கூறி வந்தாராம்.

இந்நிலையில் விருதுநகர் சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்தபோது, தனது மனைவியை வீட்டில் காணவில்லையாம். பிரியாவின் தம்பி பிரபு என்பவர் பிரியாவை கடத்திச் சென்றுவிட்டதாக, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் பிரான்சிஸ் சத்தியசீலன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரியாவைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →