ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது: நான்கு டிராக்டர்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் நால்வரையும் கைது செய்தனர். இது
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது: நான்கு டிராக்டர்கள் பறிமுதல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் நால்வரையும் கைது செய்தனர். இது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில், திங்கள்கிழமை மணல் திருட்டில் ஈடுபட்ட 4 டிராக்டர்களை பறிமுதல் செய்த போலீஸார் அதனை ஓட்டி வந்த டிரைவர்கள் நால்வரையும் கைது செய்தனர். இது தொடர்பாக டிராக்டர் உரிமையாளர்கள் நால்வரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் சார்பு ஆய்வாளர் மோகன், திருவண்ணாமலை ஆராய்ச்சி ஓடை பகுதியில் மணல் திருட்டு தடுப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அரசின் எந்த அனுமதியும் பெறாமல் ஓடையில் மணல் அள்ளிய நான்கு டிராக்டர்களை பிடித்து நகர் காவல் நிலையம் கொண்டு வந்தார். சார்பு ஆய்வாளர் மோகன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் டிராக்டர் ஓட்டுநர்கள் ரைட்டன்பட்டி கனி மகன் செல்வம் (26), பெருமாள்பட்டி கருப்பையா செட்டியார் மகன் பழனி (32), மேலத்தொட்டியபட்டி மாரியப்பன் மகன் பாமுல்ராஜ் (45), மங்காபுரம் தங்கப்பநாடார் மகன் பரமசிவம் (41) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள டிராக்டர் உரிமையாளர்கள் பெருமாள்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்த சௌந்தரபாண்டி, குலாளர் தெருவைச் சேர்ந்த சீ.சேதுராமன், மங்காபுரம் ரா.மாரிக்கனி, பெருமாள்பட்டி சீ.சிவா ஆகியோரைத் தேடி வருகிறார்கள்.