நெல்லையில் மாமன்ற உறுப்பினர் மௌன போராட்டம்
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 48 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற எஸ்.என்.சரவணன் உள்ளார். இவரது வார்டு
திருநெல்வேலி 48 ஆவது வார்டில் வளர்ச்சிப் பணிகள் செய்யாததைக் கண்டித்து அந்த வார்டின் மாமன்ற உறுப்பினர் எஸ்.என்.சரவணன் வியாழக்கிழமை மௌன போராட்டத்தில் ஈடுபட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 48 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினராக சுயேச்சையாக போட்டியிட்டு வென்ற எஸ்.என்.சரவணன் உள்ளார். இவரது வார்டு பகுதியில் வளர்ச்சிப் பணிகள் செய்யாததைக் கண்டித்தும், மாமன்றம் ஒப்புதல் இல்லாமல் ரத்து செய்த பணிகளை மீண்டும் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாநகராட்சி அருகே உள்ள அண்ணா சிலை முன்பு மௌனப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் வழங்கிய அறிக்கையில், திருநெல்வேலி மாநகராட்சியில் பணிகளின் முக்கியத்துவத்தைப் பார்க்காமலும், மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்காமலும், அதிகாரிகளிடம் கலந்தாலோசிக்காமலும் எடுத்த நடவடிக்கையால் எனது வார்டில் பல பணிகள் முடிவடையாமல் உள்ளன என கூறப்பட்டுள்ளது.