முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் வன்முறைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்: வானதி ஸ்ரீனிவாசன்

ஆம்பூர் கலவரத்திற்கு காரணமாக கூறப்படும் பவித்ராவை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

Updated On : 6 ஜூலை, 2015 at 1:01 PM
பகிர்:

ஆம்பூர் கலவரத்திற்கு காரணமாக கூறப்படும் பவித்ராவை போலீசார் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.

இதையடுத்து அங்கு மேலும் கலவரம் ஏதும் நடக்காமல் இருக்க  நள்ளிரவு முதல் வரும் 15ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு வந்திருந்த தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் வானதிஸ்ரீநிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் ஆம்பூரில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஆம்பூர் வன்முறை சம்பவத்தில் வாக்கு அரசியலுக்காக மெளணம் காக்கும் தமிழக அரசியல் கட்சிகள் மெளணம் கலைத்து தங்கள் கருத்தை தெரிவிக்க வேண்டும்.

Advertisement

கலவரத்துக்கு காரணமான எம்.எல்.ஏ கைது செய்யப்பட வேண்டும். மேலும் காவல் துறையினருக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான் இதுபோன்ற வன்முறை சமையங்களில் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை கட்டுப்படுத்த முடியும்.

தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு என்பது காலதாமதமானது. ஆம்பூர் வன்முறைக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு சிறையில் பிரியாணி வழங்கப்படுவது குறிந்த்து தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.