முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 12 ஜூலை, 2015 at 3:30 PM
பகிர்:

விருதுநகர் அருகே பெண் வழக்குரைஞர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே பாண்டியன் நகரை அடுத்த ஓடைப்பட்டி தெருவைச் சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் ஈஸ்வரி(25). இவர் மதுரையில் உள்ள மூத்த வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்று வந்தாராம். மேலும், இவருக்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தாராம். இதற்காக மருந்து மாத்திரை சாப்பிட்டும் சரியாகவில்லையாம். இதனால் மன அமைதியை இழந்த அவர் சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்தாராம். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து பாண்டியன் நகர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார்களாம்.

அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் பாண்டி கொடுத்த புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து பெண் வழக்குரைஞரின் சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.