கடலூர் மாவட்ட பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு
கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி, இன்று ஆய்வு நடத்தினார்.
கடலூர் மாவட்டதில் உள்ள பள்ளிகளில் கல்வித்துறை இணை இயக்குநர் பாஸ்கர சேதுபதி, இன்று ஆய்வு நடத்தினார்.
நேற்று நடந்த ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வுக்காக கடலூர் வந்திருந்த அவர் இன்று திங்கட்கிழமை கடலூர் மஞ்சகுப்பம், வண்டிப்பாளையம் காரைக்காடு, கடலூர் முதுநகர் (பெண்கள்,) கோழிப்பாக்கம், மேல்பட்டாம்பாக்கம், பண்ருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பள்ளி மாணவர்களுக்கு, தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் இலவசப் பாடப் புத்தகங்கள், சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் விநியோகம் குறித்து ஆய்வு செய்தார். மேலும் வரும் கல்வி ஆண்டில். சிறந்த தேர்ச்சி பெற பாடும் படி ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி, உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.