ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டதை செயல்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் பேரணி
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.
தற்போதைய செய்திகள்ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டதை செயல்படுத்த வலியுறுத்தி முன்னாள் ராணுவத்தினர் பேரணி
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.
ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.
முன்னாள் ராணுவத்தினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டம் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்டு, திட்டத்திற்கு பல கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளது. திட்டத்தை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் அலுவலகம் முன்பு பேரணியை மாவட்ட தலைவர் சுபேதார் மேஜர் எஸ்.கே.சீனிவாசன் தலைமையில் துணைத் தலைவர் சண்முகம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் சங்க அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பிச் சென்றன். பேரணியில் ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், வத்திராயிருப்பு, பெருமாள்தேவன்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.