கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியருககு பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம்
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் என்.ரஜினிக்கு பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகம் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
தற்போதைய செய்திகள்கலசலிங்கம் பல்கலைக்கழக பேராசிரியருககு பெல்ஜியம் பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம்
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் என்.ரஜினிக்கு பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகம் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழக இயந்திரவியல் துறைத் தலைவர் முனைவர் என்.ரஜினிக்கு பெல்ஜியம் கென்ட் பல்கலைக்கழகம் முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்கியுள்ளது.
பேராசியர் ரஜினி, பாலிமர் இழைகளின் கூட்டு துகள்கள் மற்றும் அதன் பயன்கள் என்ற தலைப்பில் பல ஆராய்சிக் கட்டுரைகளை பெல்ஜியம் கென்னட் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியிருந்தார்.
பெல்ஜியம் பல்கலைக்கழகம், பேராசிரியர் ரஜினியை தேர்வு செய்து மூன்று மாதம் சி.டபிள்யூ.ஓ. நிதியின் கீழ் மொத்த செலவையும் ஏற்றுக் கொண்டு பயிற்சியை மேற்கொள்ள அழைத்தது. இதன் பேரில் பேராசிரியர் ரஜினி மார்ச் 1-ம் தேதி பெல்ஜியம் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு தொடர்ச்சியாக கருத்தரங்குகளில் பேசியுள்ளார். மேலும் தற்போதைய கூட்டு துகள்கள் ஆராய்ச்சியும் சமர்ப்பித்து உரையாற்றியுள்ளார்.
பேராசிரியர் ரஜினியின் கட்டுரைகள், ஆராய்ச்சி முடிவுகளையும் ஏற்றுக் கொண்ட பெல்ஜியம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தலைவர் பேட்ரிக் டி.பீட்ஸ் தலைமையிலான குழு, அவருக்கு முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் வழங்க தேர்வு செய்து சான்றிசதழ் வழங்கியுள்ளது.
பெல்ஜியம் பல்கலைக்கழகம் சென்று முதுநிலை ஆராய்ச்சி முனைவர் பட்டம் பெற்று கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு திரும்பியுள்ள பேராசிரிர் ரஜினியை, சனிக்கிழமை வேந்தர் க.ஸ்ரீதரன், துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், வேந்தரின் தனிச் செயலாளர் முரளிகிருஷ்ணன் உள்ளிட்டோர் பாராட்டினர்.