ஸ்ரீவில்லிபுத்தூரில் 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தரும் 107 வயது முதியவர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 107 வயது பூர்தியான முதியவர் குருசாமி கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தரும் 107 வயது முதியவர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 107 வயது பூர்தியான முதியவர் குருசாமி கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 107 வயது பூர்தியான முதியவர் குருசாமி கடந்த 40 ஆண்டுகளாக இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஊரணிபட்டித் தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (107). இவர் கடந்த 40 ஆண்டுகளாக ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகம் எதிரேயுள்ள ம.பொன்னையா செட்டியார் யோகாசன நிலையத்தில் இலவசமாக யோகாசனம் கற்றுத் தருகிறார். கடந்த ஒரு மாதமாக வயது முதிர்வின் காரணமாக யோகாசனம் கற்றுத்தர செல்லவில்லை என்கிறார்
இது குறித்து அவர் தினமணி செய்தியாளரிடம் சனிக்கிழமை கூறியதாவது: நெசவுத் தொழிலாளியான எனக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கீழப்பட்டித் தெருவைச் சேர்ந்த கோபால் என்பவர் யோகாசனம் கற்றுத் தந்தார். எனது மனைவி இறந்துவிட்டார். எனக்கு 3 பெண் குழந்தைகளும் இரு மகன்களும் உண்டு. தற்போது ஞானமணி என்ற மகனின் பராமரிப்பில் இருந்து வருகிறேன்.
யோகாசனத்தில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசனங்கள் உண்டு. இதனைக் கற்றுத் தர ஆட்கள் இல்லாமல் தற்போது இவற்றில் பல மறைந்துவிட்டது. காலையில் யோகாசனம் செய்வது நல்லது. குறிப்பாக பெண்கள் மற்றும் வளர் இளம் பருவத்தைச் சேர்ந்த பெண்கள் யோகாசனம் செய்வது மிகவும் நல்லது. நான் யாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு யோகாசனம் கற்றுத் தந்தது கிடையாது. என்னிடம் யோகாசனம் கர்றுக் கொண்டு இன்று பலர் யோகாசன ஆசிரியர்களாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
மத்திய மாநில அரசாங்கங்கள் யோகாசனத்தை பள்ளிகளில் கற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் சமுதாயத்தில் ஒழுக்கம், மனித நேயம் சிறந்து விளங்கும் மாணவர்கள் மனதை ஒரு முகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்த இயலும். எனது யோகாசன சேவையைப் பாராட்டி மாவட்ட ஆட்சித் தலைவர், ராம்கோ தொழில் குழுமத் தலைவர் பி.ஆர்.ராமசுப்பிரமணியராஜா உள்ளிட்ட பலர் பரிசு வழங்கியுள்ளார்கள். நான் மருத்துவமனைக்கே சென்றது கிடையாது. எனது பற்கள் இன்று கூட வலுவாக உள்ளது. எல்லாவற்றிற்கும் காரணம் யோகாசனம்தான் என்றார் அவர்.