முகப்பு
தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் விஜயகாந்த் மைத்துனருக்கு பிடி ஆணை

நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாததையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின்

தற்போதைய செய்திகள்

பண மோசடி வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் விஜயகாந்த் மைத்துனருக்கு பிடி ஆணை

நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாததையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:50 AM
பகிர்:

நரசிம்மா படத்தில் உரிமையாளருக்கான பணம் தராத வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜராகாததையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஸூக்கு நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் 2001-ம் ஆண்டு விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்திற்கு நெல்லை மாவட்ட விநியோக உரிமை பெற்றிருந்தார். இதில் இவருக்கும் தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்-சுதீஸ் ஆகியோருக்கும் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி நஷ்டம் ஏற்பட்டால் தயாரிப்பாளர் தர வேண்டும். ஆனால் நெல்லை மாவட்டத்தில் ரூ.29 லட்சத்திற்கு மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இதில் ரூ.26 லட்சம் மாரியம்மாளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இப் பணத்தை விஜயகாந்த்-சுதீஸ் ஆகியோரிடம் திரும்பக் கேட்டபோது, அவர்கள் தர மறுத்துவிட்டார்களாம். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் மாரியம்மாள், விஜயகாந்த் மற்றும் அவரது மைத்துனர் சுதீஸ் மீது வழக்கு தாக்கல் செய்தார். விஜயகாந்த் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமனறம் விஜகாந்தை இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.

வியாழக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து நீதிபதி பசும்பொன் சண்முகையாக சுதீஷூக்கு பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஜூலை 23-ம் தேதிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இரண்டாவது பிடி ஆணை:

ஏற்கனவே இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத சுதீஷூக்கு 10.4.15-ம் தேதி நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து 27.5.15-ம் தேதி சுதீஷ் நீதிமன்றத்தில் ஆஜரானார். மீண்டும் 11.6.15-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு சுதீஷ் ஆஜராகவில்லை. இதனையடுத்து 25.6.15-ம் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை. இதனால் இவர் மீது இரண்டாவது பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →