ஏற்காடு மலைப்பாதையில் விபத்து: வாலிபர் பலி
ஏற்காடு மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வாலிபர் பலியானர்சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்கெட் பகுதியை சேர்ந்த மணி மகன் கனகராஜ் மற்றும் அதே
ஏற்காடு மலைப்பாதையில் விபத்தில் சிக்கி வாலிபர் பலியானர்
சேலம் செவ்வாய்பேட்டை பால்மார்கெட் பகுதியை சேர்ந்த மணி மகன் கனகராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் ஹரிபிரசாத் இருவரும் இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு பிற்பகல் திரும்பும்போது, 16 கொண்டை ஊசி வளைவு அருகே வந்தபோது இவர்கள் வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாடை இழந்து அருகிலிருந்த இரும்பு தடுப்பு சுவரில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கனகராஜ் (30) சம்பவ இடத்தில் உயிரிழந்தார். ஹரிபிரசாத்துக்கு கால் முறிவு ஏற்பட்டு 108 வாகனத்தில் சேலம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்காடு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து நடத்தினர்.