விருதுநகரில் உண்ணாவிரதம் இருந்த இளைஞரை மேற்கு காவல் நிலைய போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி மாணவர் தலை துண்டான நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும்.
இதை வலியுறுத்தி விருதுநகர் அருகே இனாம்ரெட்டியபட்டியைச் சேர்ந்த விஜய் ஆனந்த்(22) என்பவர் தேசபந்து மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தார். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று முன் அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருந்த இளைஞரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.