முகப்பு
தற்போதைய செய்திகள்

மணப்பாறையில் பேரணியில் அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து சாவு

கொழுந்தும் வெயிலில் காமராஜர் சிலையில் இடந்து துவங்கிய பேரணி இறுதியாக பெரியார் சிலையை வந்தடைந்தது. இந்த பேரணியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாசறையைச் சேர்ந்த பலரும் கலந்து

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:53 AM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அதிமுக சார்பில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

மணப்பாறையில் அதிமுக திருச்சி புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை மற்றும் இளம்பெண்கள் பாசறையின் சார்பில் பாசறை எழுச்சிப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கொழுந்தும் வெயிலில் காமராஜர் சிலையில் இடந்து துவங்கிய பேரணி இறுதியாக பெரியார் சிலையை வந்தடைந்தது. இந்த பேரணியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பாசறையைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இதே போல் மணப்பாறை அருகே இளங்காகுறிச்சியைச் சேர்ந்த அதிமுக கிளைக்கழக துணைச் செயலாளர் முகமது முஸ்தபா வயது 55. என்பவரும் கலந்து கொண்டார். பேரணி பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென முகமது முஸ்தபாவிற்கு மயக்கம் ஏற்படவே உடனே கட்சி நிர்வாகிகள் உடனடியாக அவரை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்தார். சம்பவம் பற்றி தகவல் அறிந்த மக்களவை துணை தலைவர் மு.தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் ரெத்தினவேல், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் இறந்தவரின் உடலை அவரது இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →