இரு மோட்டார் வாகன விபத்து வழக்குகள்: ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
இரு மோட்டார் வாகன விபத்தில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை
தற்போதைய செய்திகள்இரு மோட்டார் வாகன விபத்து வழக்குகள்: ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஆணை
இரு மோட்டார் வாகன விபத்தில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை
இரு மோட்டார் வாகன விபத்தில், உயிரிழந்தவர்களின் வாரிசுதாரருக்கு ரூ.35.13 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர், டி.மானகசேரியைச் சேர்ந்தவர் குருசாமி (26). இவரது மனைவி பரமேஸ்வரி (23). இவர்களுக்கு சுந்தரமூர்த்தி என்ற 4 வயது மகன் உண்டு. குருசாமி கட்டட ஒப்பந்தாரராக இருந்தார். 28.6.2010-ம் தேதி திருநெல்வேலி-கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மீனாட்சி இந்திரா காலனி அருகே குருசாமி இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, வேன் மோதியதில் உயிரிழந்தார்.இதனையடுத்து இவரது மனைவி பரமேஸ்வரி உள்ளிட்ட வாரிசுதாரர்கள் இழப்பீடு கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், விருதுநகர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம், வாரிசுதாரருக்கு ரூ.7.97 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.
மற்றொரு வழக்கு:
ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (30). இவரது மனைவி ஹேமலதா (26). இவர்களுக்கு பாலஹரிசெல்வம் என்ற 1 வயது மகன் உண்டு. செல்வராஜ் வனத்துறையில் ஒப்பந்ததாரராக இருந்தார். 15.2.2008-ம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி சாலையில் சாமிநத்தம் அருகே இரு சக்கர வாகனத்தில் செல்வராஜ் சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார் பேருந்து இரு சக்ககர வாகனத்தின் மீது மோதியதில் செல்வராஜ் உயிரிழந்தார்.
மனைவி ஹேமலதா மற்றும் வாரிசுதாரர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பு நீதிமன்றம் மற்றும் மோட்டார் வாகன விபத்துக்கள் இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.கோவிந்தராஜ், விருநகர் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் செல்வராஜின் வாரிசுதாரருக்கு ரூ.27.16 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.