முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலை அருகே மருத்துவமனையில் மனைவி: துக்கத்தில் கணவர் விஷம் குடித்து  சாவு

விராலிமலை அருகேயுள்ள சரளப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ரங்கசாமி(40). கட்டட தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆகி 5 பெண் பிள்ளைகள் உள்ளனர், இந்நிலையில் இவரது மனைவி

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:57 AM
பகிர்:

விராலிமலை அருகேயுள்ள சரளப்பட்டியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் ரங்கசாமி(40). கட்டட தொழிலாளி, இவருக்கு திருமணம் ஆகி 5 பெண் பிள்ளைகள் உள்ளனர், இந்நிலையில் இவரது மனைவி கர்ப்பபை பிரச்சனை காரணமாக திருச்சி அரசு மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கு முன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறர். இதனால் கடந்த சில நாட்களாக ரங்கசாமி மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் சனிக்கிழமை இரவு பூச்சி மருந்தை குடித்து வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ரங்கசாமி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார், இது குறித்து விராலிமலை காவல் உதவி ஆய்வாளர் ந.புகழேந்தி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.