இறுதிமுடிவெடுக்கும் அதிகாரம் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு: அமைச்சர் பா.வளர்மதி
தேர்தலில் பதவி வழங்குவது குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு. எனவே கட்சி நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் அமைப்பு
தேர்தலில் பதவி வழங்குவது குறித்த இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மட்டும்தான் உண்டு. எனவே கட்சி நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் அமைப்பு தேர்தலில் மனு தாக்கல் செய்யலாம் என தமிழக சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறை அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.
சிதம்பரம் தெற்குவீதி ஏ.ஆர்.மஹாலில் கடலூர் மேற்கு மாவட்ட அதிமுக பேரூராட்சி, ஒன்றிய நகர நிர்வாகிகள் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.இதில் கடலூர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும், தமிழக அமைச்சருமான பா.வளர்மதி பங்கேற்று சிதம்பரம் நகரச் செயலாளருக்கு போட்டியிடும் ரா.செந்தில்குமாரிடம் வேட்புமனுவை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:
ஒருத்தருக்கு ஒரு பதவி என பொதுச்செயலாளர் வழங்கி வருகிறார். ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு பதவியில் உள்ளவர்கள் மனு செய்ய முடியாது. கிளை செயலாளர்கள், ஊராட்சி செயலாளர்களுக்கு போட்டியிட மனு செய்ய முடியாது. கட்சி நிர்வாகிகள் யார் வேண்டுமானாலும் வேட்புமனு தாக்கல் செய்யலாம். இவர் செய்யக்கூடாது, இவரை மாவட்டச் செயலாளர் தேர்வு செய்துள்ளார் என்பது கிடையாது. இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு என அமைச்சர் பா.வளர்மதி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஏ.அருண்மொழிதேவன் எம்பி, மா.சந்திரகாசி எம்பி, நாக.முருகமாறன் எம்எல்ஏ, செல்விராமஜெயம் எம்எல்ஏ, சிதம்பரம் நகரச் செயலாலர் ரா.செந்தில்குமார், நகர பேரவை செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம், முன்னாள் மாவட்டச் செயலாளர்வி.கே.மாரிமுத்து, தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ சோமசுந்தரம், காஞ்சிபுரம் நகரமன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் மாவட்ட மாணவரணி செயலாளர் வள்ளிநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.