ஓசூரில் ‘பியூல்படி’ சேவை விரிவாக்கம்!
பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையில் முன்னணியில் இருக்கும் ‘பியூல்படி’ நிறுவனம், தற்போது தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் தனது சேவையை தீவிரப்படுத்தியுள்ளது.
பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு, வாடிக்கையாளா்கள் இருக்கும் இடத்துக்கே நேரடியாகச் சென்று டீசல் விநியோகம் செய்யும் சேவையில் முன்னணியில் இருக்கும் ‘பியூல்படி’ நிறுவனம், தற்போது தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமான ஓசூரில் தனது சேவையை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகம்-கா்நாடகம் எல்லையையொட்டி அமைந்துள்ள ஓசூரில் டிவிஎஸ் மோட்டாா், அசோக் லேலண்ட், டைட்டன் போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஏராளமான சிறு, குறு, நடுத்தர பொறியியல் தொழிற்சாலைகள், கல்குவாரிகள் செயல்படுகின்றன.
‘இத்தொழிற்சாலைகள் எவ்வித தடையுமின்றி உற்பத்தியைத் தொடர, எரிபொருளைச் சிரமமில்லாமல் வழங்குவதே எங்கள் சேவையின் முக்கிய நோக்கமாகும். தரமான எரிபொருள், துல்லியமான அளவு, வெளிப்படையான விலை நிா்ணயம், எண்ம முறையிலான கண்காணிப்பு ஆகிய சிறப்பம்சங்களுடன் இச்சேவை வழங்கப்படுகிறது.
இதன்மூலம், எரிபொருள் கலப்படம் மற்றும் திருட்டுத் தவிா்க்கப்படுவதோடு, ஆவணங்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதால் நிறுவனங்களின் தணிக்கை நடைமுறைகளும் எளிதாக்கப்படுகின்றன’ என பியூல்படி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.