முகப்பு
தற்போதைய செய்திகள்

மது போதையில் பைக்கில் சென்ற உதவி காவல் ஆய்வாளர் :  ஆட்டோ மீது மோதி விபத்து

ஆம்பூர் அருகே மது போதையில் பைக்கில் சென்ற உதவி காவல் ஆய்வாளர் ஆட்டோ மீது மோதிய

Updated On : 3 மே, 2015 at 3:56 PM
பகிர்:

ஆம்பூர் அருகே மது போதையில் பைக்கில் சென்ற உதவி காவல் ஆய்வாளர் ஆட்டோ மீது மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தார்.

ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் காண்டீபன்.  இவர் மது போதையில் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார்.   ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தருகே சென்றபோது ஆம்பூர் நோக்கி சென்ற ஆட்டோ மீது மோதியுள்ளார்.   இவ்விபத்தில் ஆட்டோவின் முன்புறம் சேதமடைந்தது. ஆட்டோ டிரைவர் ஆம்பூர் சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்த மணிவாசகம் (30) காயமடைந்தார்.  அவர் இதுகுறித்து ஆம்பூர் டிஎஸ்பி கணேசனிடம் புகார் கூறியுள்ளார். 

அவருடைய உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் காண்டீபனை ஆம்பூர் கிராமிய காவல் ஆய்வாளர் சி. பாபு ரவிச்சந்திரன் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றார்.  அரசு மருத்துவமனையில்  ரத்த பரிசோதனை செய்வதற்கு முன்னதாகவே உதவி ஆய்வாளர் காண்டீபன் எவருக்கும் தெரியாமல் அரசு மருத்துவமனையை விட்டு வெளியேறி சென்றுள்ளார்.  மது போதையில் விபத்து நடந்தபோது அவர் காவல் துறை சீருடையில் இருந்துள்ளார்.

Advertisement

காயமடைந்த ஆட்டோ டிரைவர் மணிவாசகம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.   ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

மேலும் அவர் பணியில் இருக்கும் போதே எப்பொழுதும் மது போதையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.