முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ரயில்வே ஊழியர் மின்சாரம் தாக்கி சாவு

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏசி பெட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:32 AM
பகிர்:

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏசி பெட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபட்ட ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருநெல்வேலி பேட்டை காந்திநகரை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சங்கரபாண்டியன் (28). இவர் சந்திப்பு ரயில் நிலையத்தில் ஏசி மெக்கானிக்காக பணி செய்து வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை சந்திப்பு ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் ஏசி பெட்டியில் பராமரிப்பு பணியில் ஈடுபடுவதற்காக சங்கரபாண்டியன், ஏணி மூலம் ரயில் ஏறினாராம்.

ரயில் பெட்டியில் அமர்ந்தவாறு பணியில் ஈடுபட்டபோது, பெட்டிக்கு அருகாமையில் சென்ற மின்சார வயரில் சங்கரபாண்டியன் தொட்டு விட்டதாக கூறப்படுகிறது. அப்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார்.

இது குறித்து திருநெல்வேலி ரயில்வே போலீஸார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

முழு கட்டுரையைப் படிக்க →